வாடிப்பட்டி :
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு ,திமுக வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவர் பி. எம். கோகுல் தலைமை தாங்கி,இனிப்பு வழங்கினார். அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி முன்னிலை வைத்தார். நீதிமன்ற அமைப்பாளர் ராஜாஜி வரவேற்றார். இதில் துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர்கள் அருள் கண்ணன், வெற்றிவேல் மற்றும் பழனி, சந்திரமோகன், சுரேஷ், நாச்சியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில், இலக்கியா நன்றி கூறினார்.