திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த கோடு வெளி ஊராட்சிக்கு உட்பட்ட 42.காரணி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலை கிராம மக்களின் பங்களிப்புடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு தாமரைப்பாக்கம் செந்தில் குருக்கள் தலைமையில் பாளையம் அருகே ஹோம்குண்டம் அமைத்து பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து கணபதி பூஜை உடன் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
இதன் பின்னர் 8:30 மணி அளவில் மேளதாள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கோவில் சுற்றி வளம் வந்து ஆலய மீதுள்ள கோபுர கலசத்திற்கு விநாயகர், முருகர், கூடிய பரிவார தெய்வங்களுக்கும் மூலவர் பெரியாண்டவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது தொடர்ந்து மூலவர் பெரியாண்டவருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
காலை,மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.