Close
ஜூன் 9, 2025 2:24 காலை

கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்..!

புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றிய அமைச்சர் மூர்த்தி

மதுரை:

மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் ,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் கட்டடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

உடன் ,மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி , மதுரை வருவாய் கோட்டாட்சியர் .ர.த. ஷாலினி உட்பட பலர் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், (07.06.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி,286 பயனாளிகளுக்கு ரூ.2,91,14,800/- மதிப்பீட்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.

உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் , மாநகராட்சி மேயர் இந்திராணி , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் அவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நா.சாமிநாதன் உட்பட பலர் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top