Close
ஜூன் 12, 2025 11:17 மணி

அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில், வைகாசி விசாக பால்குட ஊர்வலம்..!

வைகாசி விசாக பால்குட ஊர்வலம்

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம்,அலங்காநல்லூர் அருகே கம்மாளபட்டி, வலசை கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், லட்சுமி, சரஸ்வதி, உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் திருக்கோவிலில் வைகாசி விசாக பால்குட திரு விழா நடைபெற்றது.

சிறப்பு யாகசாலை பூஜையில் ,கணபதி பூஜை, சங்கல்பம், கோபூஜை, புண்ணியாக வாசகம், வேதபாராயணம் முழங்க சுப்பிரமணியருக்கு பாலபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து, அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top