காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 7,392 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 1,982 மகளிர் சுய உதவிக் குழுக்களும் மொத்தம் 9,374 மகளிர் சுய உதவிக் குழுக்களில் 1,12,880 பெண்கள் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
2024-25 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு ரூ.694 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரையில் ரூ. 694.24 கோடி எய்தியுள்ளது.
அதனை தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 548 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.23 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளும், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் (நுண் நிதி கடன்) 6 பயனாளிகளுக்கு ரூ.3.2 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 554 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் பிச்சாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.