Close
ஜூன் 13, 2025 4:29 மணி

விவசாய பயிர் கடன் உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

வேலுசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர்.

நாமக்கல்:

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் உச்சவரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மேட்டூர் அணையில் இருந்து, ஜீன் 12 ந் தேதி, டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக, தமிழக முதல்வர் உரிய நேரத்தில், நேரில் வந்து தண்ணீர் திறந்து வைத்தார். இதை விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தேவையான காவிரிநீரை, தினந்தோறும் விகிதாச்சார அடிப்படையில் கர்நாடக அரசிடம், கூட்டணி பாரபட்சம் பார்க்காமல், தமிழ் நாட்டிற்கு உண்டான உரிமை நதிநீரை பெற்றுத்தர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்ய தங்குதடையின்றி கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

மேலும், தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் உச்சவரம்பு ரூ.3,00,000 மட்டும் தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகள் பயிர் செய்ய மூலதன செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி, பயிர் கடன் உச்சவரம்பை ரூ. 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக அதிகரித்து வழங்க முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top