Close
ஜூன் 13, 2025 4:52 மணி

அணியார் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் : ராஜேஷ்குமார், எம்.பி., நலத்திட்ட உதவி வழங்கல்..!

நாமக்கல் அருகே, அணியார் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ராஜேஷ்குமார் எம்.பி., கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர்.

நாமக்கல்:

அணியார் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ராஜேஷ்குமார், எம்.பி., கலந்துகொண்டு 218 பயனாளிகளுக்கு ரூ. 81.68 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், மிட்டா அணியார் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

குறிப்பாக பொதுமக்கள் அரசு அலுவலகங்களை தேடி, தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வந்த நிலையில், பொதுமக்களை தேடி அனைத்து துறை அரசு அலுவலர்களும் அவர்களது கிராமங்களுக்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட மாதம் ஒரு முறை மக்கள் தொடர்பு திட்ட முகாமினை நடத்திட உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் முதல்வரின்கனவு திட்டமாகும். கடைகோடி மக்களுக்கும் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இன்று நடைபெறும் முகாமில், 14 அரசுத் துறைகளின் சார்பில், இலவச வீட்டுமனை பட்டா, இ.பட்டா, நத்தம் பட்டா மாறுதல் உத்தரவுகள், இலவச தையல் மெசின்கள், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்டவை, 218 பயனாளிகளுக்கு ரூ. 81.68 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் உடல்நலனையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

முன்னதாக அரசுத்துறைகளின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட திட்ட விளக்க கண்காட்சி அரங்குகளை ராஜேஷ்குமார் எம்.பி., திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆர்டிஓ சாந்தி, சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top