காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக காவலர் வீட்டு வசதி வாரிய மூலம் தாலுகா அலுவலக வளாகத்தில் ரூபாய் 6.28 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு நிலையம் , ரூபாய் 1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் ஆகிய இரண்டு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனை தமிழக காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் ஆய்வு மேற்கொண்டு பணி விவரங்களை கேட்டு அறிந்து மற்றும் பல்வேறு ஆலோசனையினையும் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதியில் 1116 காவலர் குடியிருப்புகள் கட்ட தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு 50 கோடி ரூபாய் செலவில் காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் முன்னுரிமை அடிப்படையில் சீர் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் 54 சதவீதத்திற்கு மேல் காவல்துறை யினருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் தமிழக அரசின் இலக்காக 75 சதவீத காவலர் குடியிருப்பு அமைக்க பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் எஸ்.பி க.சண்முகம் , டிஎஸ்பி சங்கர்கணேஷ் , காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்.எம். அப்துல்பாரி , உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் மற்றும் ஒப்பந்ததாரர் என பலர் உடன் இருந்தனர்