சின்ன காஞ்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வருவது பி எம் எஸ் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
போதிய அளவு இட வசதி இல்லாத நிலையில், புதிய வகுப்பறையில் கட்ட கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.61 கோடி மதிப்பீட்டில் தரித்தளம் மற்றும் இரண்டு அடுக்கு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று இதற்கான பூமி பூஜை விழா அழைப்பு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு வருகை தந்த அவரை மாணவர்கள் வரவேற்ற நிலையில், விழா பகுதியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பள்ளி கட்டிடம் குறித்த விளக்கங்களை அவருக்கு அளித்தனர்.
அப்போது பள்ளி முழுவதுமே கட்டிடங்களாக நிறைந்துள்ளதே ? மாணவர்கள் விளையாட்டுக்கு என்ன செய்வார்கள் ? மாணவர்களின் கருத்துக்களை ஒருவரும் கேட்காமல் கட்டிடம் கட்டும் வேலையை மட்டும் செய்கிறீர்கள் என சரமாரி கேள்விகளை தொடுத்தார்.
உடனடியாக இதனை கருத்தில் கொண்டு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுங்கள். பணம் வழங்காமல் போனாலும் பரவாயில்லை என தெரிவித்தார்.
ஏற்கனவே 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் பள்ளியில் போதிய கழிவறை இல்லாதது பெரும் குறையாக இருந்த நிலையில் இது போன்று விளையாட்டு திடலும் இல்லை என்றால் அவர்களின் உடல்நிலை குறித்து அனைவரும் கவலைப்படுகின்றனர்.