மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை மூன்றாவது நாளாக குற்றால அருவிகளில் குளிக்க தடை.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் தொடர் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலம் பிரதான அருவியில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.