Close
ஜூன் 15, 2025 3:13 காலை

சோழவந்தானில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா..!

பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன

சோழவந்தான்:

மதுரை சோழவந்தான் அருகே ,திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

சோழவந்தான் அருகே, வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில் இலவச நோட்புக் எழுதுபொருள் ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் அழகசுந்தரம் தலைமை தாங்கினார் .

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சகுபர் சாதிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோட்புக் எழுது பொருட்களை வழங்கினார் .பள்ளி ஆசிரியை ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளும் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top