உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறுபாடு பகுதிகளில் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அவ்வகையில், 46 வது வார்டுக்குபட்ட மிலிட்டரி சாலை அருகே வசிக்கும் பெண்கள் தங்கள் பகுதியில் குடிநீர் தரமாக இல்லை என கூறி எம்எல்ஏ சுந்தரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இக்கோரிக்கையை மனுவைப் பெற்ற எம்எல்ஏ சுந்தர் , உடனடியாக அப்பகுதிக்கு மனு அளித்த பெண்களுடன் சென்று அங்கிருந்த வீடு ஒன்றிலிருந்து குடிநீர் வாங்கி பருகினார்.

அது எந்த ஒரு உவர்ப்பு தன்மையும் இல்லாமல் சுவையாக உள்ளதாக புகார் தெரிவித்த பெண்ணிடம் கூறி மீதமுள்ள குடிநீரையும் குறிக்க சொல்லி கேட்டபோது நல்லா தான் இருக்கு சார் ஆனால் சமையல் செய்யும் போது மஞ்சள் நிறமாக மாறி விடுவதாக மீண்டும் தெரிவித்தார்.
கோரிக்கை மனு பெற்று உடனடியாக களத்தில் சென்று பொதுமக்களின் குறையை ஆய்வு செய்த செயல் வரவேற்பு பெற்றது.