Close
ஜூன் 15, 2025 5:41 காலை

வரும் 18ம் தேதி கோழித்தீவனமாக கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி இலவச பயிற்சி..!

கோப்பு படம்

நாமக்கல்:

கோழித் தீவனத்திற்கு பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி செய்யும் முறை குறித்து வருகிற 18ம் தேதி நாமக்கல்லில் இலவச பயிற்சி நடைபெறுகிறது.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே), வருகிற 18ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கோழி வளர்ப்பில் அதிக புரதச் சத்துள்ள மாற்றுத் தீவனமாகப் பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் (பிளாக் சோல்ஜர் ஃபிளை) உற்பத்தி செய்யும் முறை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் கோழிகளுக்கு உணவாக பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் வளர்க்கும் முறைகள், பதப்படுத்தும் முறைகள், அதன் கழிவுகளை சாகுபடி செய்யும் பயிர்களுக்கு உரமாக பயன்படுத்துதல், வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள், ஈக்களை பிரித்தெடுக்கும் முறைகள் பற்றி தெளிவாக பயிற்சி அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் விவசாயிகள், கோழிகள் வளர்க்கும் விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், மகளிர் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்தை 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளவேண்டும் என மையத்தின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top