அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் ,தண்டலை கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, இலவச நோட்டு பேனா, பென்சில். சிலைடு ஆகிய உபகரண ங்களை,பள்ளியின் தலைமை ஆசிரியை சகாய சாந்தி ராணி, முன்னிலையில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் சோதி வேலாயுதம் வழங்கினார்.
சமூக ஆர்வலர் தங்கவேல் என்ற பூக் குஇனியான், 120 மாணவ மாணவிகளுக்கு மூன்றாவது ஆண்டுகளாக வழங்கி வருகிறார். இதில், நாட்டாமை சுந்தராஜு, வக்கில் சிதம்பரம், காயம்பு பள்ளி ஆசிரியர்கள் வேலாயுத மூர்த்தி சுகன்யா தேவி கவிதா தனலட்சுமி ராஜலட்சுமி செபஸ்தியான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.