Close
ஜூன் 16, 2025 10:22 மணி

கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரசார இயக்கம்..!

கோரிக்கைகளை வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஏலூரில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

நாமக்கல் :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதுச்சத்திரம் ஒன்றியம் ஏலூர் பகுதியில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

மத்திய பாஜ அரசு விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க வேண்டும். அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பெரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகை வழங்குவதை கைவிட்டு, செல்வ வரி விதிக்க வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி, தொடர்ந்து வேலை வழங்கிட வேண்டும். வேலை செய்தவர்களுக்கான சம்பளத்தை மாதம் தோறும் பாக்கி இல்லாமல் வழங்கிட வேண்டும். மாநில அரசு வீட்டு மனை இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கிடவும், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏலூர் ஊராட்சியில் தெற்குத் தெரு மயானத்திற்கு செல்லும் ரோட்டை சீரமைத்து, தார் சாலையாக மாற்றி கொடுக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டுள்ள 3 கழிப்பிடங்களுக்கும் தண்ணீர் வசதி, மின்சார வசதி, தூய்மை பணியாளர்கள் நியமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். வேப்பம்பட்டி அருந்ததியர் தெருவிற்குள் மழை நீர் போகாமல் சாக்கடை கால்வாய் அமைத்திட வேண்டும்

என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி மாவட்ட குழு உறுப்பினர் ராணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் நடேசன், லட்சுமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top