Close
மார்ச் 7, 2026 3:36 மணி

சோழவந்தான் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம்..!

முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அன்னதானம்

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெரும் திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான தீர்த்தவாரி திருவிழா நேற்று இரவு வைகை ஆற்றில் நடைபெற்றது தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து வைகை ஆற்றில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தரிசனம் தந்தார்.

தொடர்ந்து ஊஞ்சலாட்டம் நடைபெற்றது.தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் ,சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் மான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்றார். அம்மா பேரவை மாநில நிர்வாகி வெற்றிவேல், பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் அண்ணா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன்,பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top