எஸ்டிபிஐ கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ந நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஷேக் மைதீன் தலைமை தாங்கினார். நகர துணைத்தலைவர் பாதுஷா, நகர துணைச்செயலாளர் ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மஹ்மூத், நகர்மன்ற உறுப்பினர்கள் மைதீன் ராசப்பா, நாகூர் மீரான், மருத்துவர் ஜாபர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்துகொண்டு கட்சி கோடியேற்றி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி பத்தாம்வகுப்பு மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நகர தலைவர் செய்யது அலி பாதுஷா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 100 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.




