நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு கூட்டத்தின் அதன் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்துகொண்டார்.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இரண்டாக பிரிக்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனியாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 7ஆவது நிர்வாகக்குழு கூட்டம் அதன் தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமையில் நடைபெற்றத. வங்கி துணை தலைவர் பொன்னுசாமி எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மற்றும் இணைப்பதிவாளர் அருளரசு வங்கி பொது மேலாளர் சதீஷ்குமார், உதவி பொது மேலாளர்கள் சேகர், செல்வம் ஆகியோர் வங்கியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.
வங்கியின் அடுத்தகட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், செல்வகுமார், டாக்டர் மாயன், அசோக்குமார், நவலடி, ராணி பெரியண்ணன், ஜோதிலட்சுமி, கவுரி, மத்தியக் கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு சார்பதிவாளர் குமாரி மோகனா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் சரவணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




