மதுரை :
விடியல் பயணம் என்று சொல்லி மக்களின் ஆயுளை முடியும் பயணமாக திமுக அரசின் போக்குவரத்து பயணமாக இருக்கிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றம் சாட்டினார்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில்,மதுரை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழச்சிக்கு, மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார்.
ட்ரு ஹோம் பைனான்ஸ், எலிக்ஸிர் ஃபவுண்டேஷன் இணைந்து இவற்றை வழங்கினர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தலைக் கவசங்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், மதுரை காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளர் ரஞ்சித், ட்ரு ஹோம் மற்றும் எலிக்ஸிர் ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
ஸ்டாலின் திமுக ஆட்சி சக்கரம் சூழல்கிறதோ இல்லையோ அரசு பஸ்ஸின் சக்கரங்கள் துண்டாகி தனியே ஓடிக்கொண்டிருக்கிறது. மதுரையில் இருந்து சென்ற அரசு பஸ் கடையநல்லூர் அருகே இரண்டு சக்கரங்கள் கட்டாகி ரோட்டில் ஓடி, பயணிகள் எல்லாம் காயமடைந்தனர். இப்படி ஒரு செய்தி இதுவரை நாம் பார்த்ததில்லை
தமிழகத்தில் 20,800 பேருந்துகள் உள்ளது இதன் மூலம் நாள்தோறும் ஒரு கோடியே 25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள், இதில் பண்டிகை காலங்கள் மூலம் மூகூர்த்த காலங்கள் எடுத்துக் கொண்டால் கூடுதலாக 30 லட்சம் பேர்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என நமக்கு கிடைத்த புள்ளிவிபரங்கள் கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சி மட்டும் 14,489 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது. அதேபோல, 7,000 போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
2020 கொரோனா காலத்தில் எடப்பாடியார் 8மாதம் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கியது மட்டுமல்ல அது 10 சதவீத போனசும் வழங்கினார்.
பேருந்துகளை இயக்கி 9 ஆண்டுகள் முடிவில் 12 லட்சம் கிலோமீட்டர் ஓடினால் அந்த பேருந்து மாற்றம் செய்ய வேண்டும் ,அந்த அடிப்படையில் இதுவரை பத்தாயிரம் பேருந்துகள் வயது முதிர்ந்துள்ளன ஆனால் அந்த பேருந்துகளுக்கு எல்லாம் பெயிண்ட் அடித்து ஓட்டுகிறார்கள் .
மத்திய அரசு அகழாய்வில் விளக்கம் கேட்பதில் திமுக அரசு ஏன் குதிக்கிறது” என, பேசினார்.




