Close
மார்ச் 7, 2026 4:54 மணி

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோயில் அறங்காவலர்கள் 5 பேர் பொறுப்பேற்பு..!

பொறுப்பேற்றுக்கொண்ட அறங்காவலர் குழு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில் அறங்காவலர்கள் 5 பேர் இன்று மூலவர் முன்பு உறுதிமொழி ஏற்று பொறுப்பேற்று கொண்டனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில்.ரூ. 28 கோடி மதிப்பில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக சென்னையைச் சேர்ந்த எம். வி.எம் வேல்மோகன் மற்றும் உறுப்பினர்களாக வா.ஜெகன்னாநதன், சு.வரதன், வசந்தி சுகுமாரன், எஸ் விஜயகுமார் ஆகியோர் அறங்காவலர் குழு நிர்வாகிகளாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு காஞ்சிபுரம் சரக அறநிலை துறை உதவி ஆணையர் ஆர். கார்த்திகேயன் பதவி ஏற்பு செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பாலாலய செய்யப்பட்ட மூலவர் சன்னதியில் இவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஆய்வாளர் அலமேலு ஆகியோர் உட்பட திமுக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் தொகுதி எம்பி க. செல்வம் உட்பட அறநிலை துறை அதிகாரிகள் கோவில் பணியாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் பலரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நிறைவாக ஆலயத்தில் உள்ள மூலவர் முன்பாக திருக்கோவில் நிர்வாகத்தை நேர்மையாகவும் சிறப்பாக நடத்துவேன் என அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top