Close
மார்ச் 7, 2026 4:45 மணி

வாடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றங்கள் துவக்கம்..!

மாணவர் மன்றங்கள் அமைக்கப்பட்டது.

வாடிப்பட்டி :

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமையில் உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சுற்றுச்சூழல் நுண் கலை உள்ளிட்ட பல்வேறு மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டது.

இந்த மாணவர் மன்றங்களுக்கு செயலாளர்களாக ஆசிரியர்கள் நாகலட்சுமி,பிருந்தா பிரியதர்ஷினி, அருள்மொழி, ஞானரத்தினம், தமிழரசி தனலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த . நிகழ்ச்சியில் கவிதை மற்றும் க டான் கிராம்கணித விளக்கம், மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றிய விவரக் குறிப்புகள் மாணவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது.

மேலும் சுற்றுச்சூழல் பராமரிப்பு பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றி கருத்தரங்கு நடந்தது. இதில் மாணவர்களுக்கு பள்ளி கல்வி மேலாண்மை குழு தலைவர் அங்காள ஈஸ்வரி பரிசு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top