நாமக்கல் :
நாமக்கல் மாவட்ட புதன்சந்தை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வருகிற 25ம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இதனால் செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் 25ம் தேதி காலை 9 மணி வரை மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரர்ராஜன் தெரிவித்துள்ளார்.




