மதுரை:
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதி கின்னிமங்கலம் கிராமத்தில் திமுக சார்பில் நல உதவிகள் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

தலைவர்கள் பேசி முடிந்த உடனேயே 1500 பெண்களும் ஒட்டுமொத்தமாக மேடையில் நலஉதவிகள் வாங்குவதற்கு முண்டியடித்துக் கொண்டு சென்ற பொழுது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. யாருக்கும் நலஉதவிகளை வழங்க முடியவில்லை. கட்சியினர் மைக்கில் கத்தியும் பெண்களை வரிசைப்படுத்த முடியவில்லை.
பிறகு காவல்துறையினரை அழைத்து பெண்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி பிறகு வரிசையாக நிற்க வைத்தனர். பின்னர் வரிசையாகச் சென்று நல உதவிகளை வாங்கிக்கொண்டனர். பின்னர் சிக்கன் பிரியாணியும் வாங்கிச் சென்றனர் .
திருமங்கலம் தொகுதி முழுவதிலும் 1.50 லட்சம் பேருக்கு நல உதவிகள் வழங்குவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.




