அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றியம் சத்திர வெள்ளாளப்பட்டி, மறவர்பட்டி, ராஜக்கல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு, கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தன்ராஜ் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மேற்கு ஒன்றியச் செயலாளர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் சுபாஷ், மதுரை வீரன் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ .வெங்கடேசன் பேசியதாவது :
தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வெகுவாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிகழ்வுகளுக்காக வரும்பொழுது பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக ,கிராமச் சாலைகள் சிறு பாலங்கள் பாசன வாய்க்கால்கள் தானியக்களம் ரேஷன் கடை பேருந்து நிறுத்த நிழற்குடை ஆகியவை தேவையான இடங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது இதை தவிர மேல்நிலை நீர்த்திக்க தொட்டிகள் கழிவுநீர் கால்வாய்கள் அனைத்தும் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் செய்யப்பட்டுள்ளது என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் ராஜேந்திரன்., அருண்குமார் ,பழனி, சந்தன கருப்பு ,சதீஷ், யோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




