Close
மார்ச் 7, 2026 5:52 மணி

மதுரையில் பல்வேறு திட்டப்பணிகள் : அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை:

மதுரை மாவட்டம்,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து, புதுக்குளம் 1 பிட், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர் மற்றும் கொடிமங்கலம் உள்ளிட்ட 16 இடங்களில் ரூ.66 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி
வைத்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து, புதுக்குளம் 1 பிட், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர் மற்றும் கொடிமங்கலம் உள்ளிட்ட 16 இடங்களில் ரூ.66 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி (30.06.2025) தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு அடிப்படைத் தேவைகளை கொண்டு சேர்க்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவில்பாப்பாக்குடியைத் சேர்ந்த மக்கள் பயன்பெறுகின்ற வகையில் 11.06.2025-அன்று ரூ.7.66 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 28.06.2025-அன்று ரூ.7 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.14.66 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, தெருக்களில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து, புதுக்குளம் 1 பிட், துவரிமான், கீழமாத்தூர், மேலமாத்தூர் மற்றும் கொடிமங்கலம் உள்ளிட்ட 16 இடங்களில் ரூ.66 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தன்னிறைவு பெற்ற பகுதிகளாக உயர்த்துவதற்கு இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற பல்வேறு திட்டப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மேலும், இப்பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

அதன்படி, மதுரை திருப்பரங்குன்றும் ஊராட்சி ஒன்றியம், மொத்தம் 16 இடங்களில் ரூ.66 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை , வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) சௌ.தமிழரசி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top