Close
மார்ச் 7, 2026 1:41 மணி

புதிய உறுப்பினர் சேர்க்கையில் திமுக நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் : எம்.பி.,..!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., பேசினார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்

நாமக்கல்:

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து ஓரணியில் தமிழகம் திட்டத்தின் கீழ், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பதில், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., பேசினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், தொகுதி பார்வையாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் கூட்டத்தில் கலந்துகொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த ஓரணியில் தமிழகம் திட்டத்தின்படி கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கிப் பேசினார்.

அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க, கட்சி நிர்வாகிகளும், பூத் ஏஜெண்டுகளும் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, டாக்டர் மாயவன் உள்ளிட்ட திரளான மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top