கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மண்,மொழி ,மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பரப்புரை திட்டத்தினை துவக்கி வைத்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் இன்று முதல் இந்த பரப்புரை நிகழ்வினை திமுக நிர்வாகிகள் வீடுகள் தோறும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து தமிழக அரசு செயல்படுத்திய நலதிட்டங்கள், அனைவரையும் பிளவுபடுத்த திட்டமிடும் கட்சிகளை புறம் தள்ளி ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டும் என எடுத்துக் கூறி அவர்களின் விருப்பத்தின் பேரில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அதிகாலை 7 மணி முதல் துவங்கி உள்ளனர்.

அதன் அடிப்படையில் 41வது வார்டு காஞ்சி மாநகர் பகுதியான விவேகானந்தர் நகர் பகுதியில் பகுதி கழக செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன், மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன் தலைமையில் 25க்கும் மேற்பட்ட திமுகவினர் விவேகானந்தா நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பொது மக்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு எனும் பரப்புரையை தொடங்கியும், உறுப்பினர்கள் சேர்க்கையும் மேற்கொண்டனர்.
மேலும் பொதுமக்களிடம் ஆறு கேள்விகளுக்கு பதில் பெற்று அதனை பதிவு செய்கின்றனர். செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் அவர்களது விருப்பத்தின் பேரிலேயே பதிவு செய்யப்பட்டு otp-யின் பெறப்பட்டு அதன் பின் உறுப்பினராக ஆன்லைன் வழியாக இணைக்கப்படுகின்றனர்.
உறுப்பினர் இணைந்ததற்கான குறுந்தகவல் அவர்களது தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.
இதே போல் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்குபட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த பரப்புரை நிகழ்வு நடைபெறுகிறது.




