Close
மார்ச் 7, 2026 6:08 மணி

காஞ்சிபுரத்தில் ஏழு கட்டிடங்களை முதல்வர் காணொளி காட்சி வழியாக திறப்பு..!

காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை முதல்வர் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்து பொது மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் இனிப்புகள் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 208 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ,சென்னை, சாஸ்திரி நகரில் நடைபெற்ற விழாவில் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் ஆறு நகர் நல வாழ்வு மைய கட்டிடங்களையும், வாலாஜாபாத் வட்டம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் ரூ 1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் என ஏழு கட்டிடங்களை முதல்வர் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஊராட்சி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஏற்கனவே மருத்துவத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சுற்று பகுதி கிராம மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்பதால் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் 33 இருந்த நிலையில் தற்போது ஏழு கூடுதலாகி 40 மையங்களும் பொது மக்களுக்கான மருத்துவ சேவை செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் .
செந்தில்குமார் , ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் , திமுக ஒன்றிய செயலாளர் சேகர், வாலாஜாபாத் நகர திமுக செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் சஞ்சய் காந்தி உள்ளிட்ட ஏராளமான மருத்துவத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top