மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக பல்வேறு இடங்களில் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி நகர பாஜக சார்பில் வாய்க்கால் பாலம் மந்தை இசக்கி அம்மன் கோவில் முன்பு மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனை விளக்க தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகரத் தலைவர் சங்கர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் கோதை மாரியப்பன்,மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
காஷ்மீரில் சிறப்பு சட்டம் ரத்து , நீட் தேர்வு, ஜி எஸ் டி ,வக்பு வாரியா திருத்தச் சட்டம், முத்தலாக் சட்டம்,போன்ற சட்ட திருத்தங்கள் மற்றும் ஜல் ஜீவன், விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்கள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம், மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் துண்டு பிரசுரங்கள் விநியோகப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார்,மாவட்டச் செயலாளர் மந்திரமூர்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




