அரசு தனியார் அலுவலகங்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ள பொருட்களில் ஒன்று பிரிண்டர் எனும் இயந்திரம். இதில் எப்சன் நிறுவனம் மிகச்சிறந்த இடத்தை உலக அளவில் பிடித்து இன்றளவிலும் நிலைக்கு நிற்கின்றது.
இந்நிலையில் கால நிலைக்கு ஏற்ப சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் இதனை மேம்படுத்தும் வகையில் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட முடிவு செய்தது.

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம்- வடிகால் சிப்காட் பகுதியில் இயங்கும் ரிக்குன் தொழிற்சாலையுடன் இணைந்து எப்சன் நிறுவனம் புதிய முதல் எக்கோ இங்க் டேங்க் பிரிண்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இன்று தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் எப்சன் நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் ஜங்கிச்சி யோஷிடா ( Junkichi Yoshida ) தொழிற்சாலையில் அமைப்பினை சுற்றிப் பார்த்த பின் உற்பத்தி பிரிவினை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய யோஷிடா , இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் எப்சன் நிறுவன பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். சுற்றுச்சூழலை மேம்படுத்த வகையிலும் இந்தியாவில் வணிகச் சந்தையின் வரவேற்பு மற்றும் மத்திய மாநில அரசுகளின் ஆதரவு உள்ளிட்டவைகளால் புதிய எக்கோ இங்க் டேங்க் பிரிண்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதில் உற்பத்தி வரும் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. இந்தியாவில் வளர்ந்து வரும் பொருளாதாரம் இளைஞர்களின் எண்ணிக்கை மற்றும் டிஜிட்டலிகளின் வரவேற்பு என அனைத்தும் உள்ள நிலையில் இது பெரும் வரவேற்பை பெறும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எப்சன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சாம்பமூர்த்தி, ரிக்குன் தொழிற்சாலை நிறுவனர் முத்து சிவன் உள்ளிட்ட பல்வேறு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




