Close
மார்ச் 7, 2026 4:46 மணி

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி

நாமக்கல்:

அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள, பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கடந்த 1.1.2011க்கு முன்பு, திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும், அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை, வரன்முறை படுத்தும் திட்டத்தின் கீழ், வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியற்ற கல்வி நிறுவனங்கள் 1.7.2025 முதல் 30.6.2026 வரை ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு உத்தரவில், குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலம் கடந்த 26.6.2025ல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்கீழ், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள, கல்வி நிறுவன கட்டிடங்கள் மலையிடப் பகுதியில் (எச்ஏசிஏ) அமைந்திருந்தால், அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி விண்ணப்பம் செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் டிசிபிஆன்லைன்.டிஎன்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட் முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொண்டு அனுமதி பெறவேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top