மதுக்கூர் வட்டாரம் காசாங்காடு விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ் விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகள் போன்றவைகளை பட்டுக்கோட்டை சட்டமன்றஉறுப்பினர் அண்ணாதுரை வழங்கினார்.

தமிழக முதல்வர் இன்று ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டத்தை காணொலிமூலம் தமிழகம் முழுவதும் துவக்கி வைத்தார்.இத்திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வேளாண் துறை மூலம் மரத்துவரை,காராமணி,அவரை அடங்கியவிதைதொகுப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மேலும் தோட்டக்கலை துறை மூலம் காய்கறி விதைகள் மற்றும் பழக்கன்றுகள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளது.பயறுவகைவிதைதொகுப்பு இல்லங்களில் நடவு செய்ய ஏதுவான இடம் உள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்தவர்களுக்கு இவை வழங்கப்படுகிறது.20 சதம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமையில் வழங்கப்படும்.

மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆதார் குடும்பஅட்டை தகவலுடன் பதிவு செய்திருந்த 30 விவசாயிகளுக்கு இன்று பட்டுகோட்டை சட்டமன்றஉறுப்பினர் அண்ணாதுரை மற்றும் வேளாண் துணை இயக்குனர் மாலதி ஆகியோர் வேளாண் துறையில் பதிவு செய்த 30 விவசாயிகளுக்கு பயறுவகைவிதை
தொகுப்பினை 100 சத மானியத்திலும் தோட்டகலைதுறையில் பதிவு செய்தவிவசாயிகளுக்கு வீட்டு காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழக்கன்றுகளையும் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் ஜெரால்டு மற்றும் தோட்டகலை உதவி அலுவலர் ஜானகிராமன் மற்றும் சரவணன் செய்தனர்.வேளாண்அலுவலர் சரவணன் மற்றும் தோட்டகலைஅலுவலர் கார்த்திகா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி அனைவருக்கும் நன்றி கூறினார்.




