Close
மார்ச் 7, 2026 6:19 மணி

விவசாயிகளின் எதார்த்தத்தை கூறிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர்..!

கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ பழனி நாடார்

விவசாயி என்றால் பெண் தர மறுக்கிறார்கள் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேச்சு.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை மையத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்ட தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் பேசுகையில் தென்காசி மாவட்டத்தில் நீண்ட நாள் விவசாயிகளுக்கு பயன்படும் திட்டமான ராமநதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டப் பணிகள் முடிவடையும் சூழ்நிலையில் உள்ளது. தென்காசிக்கு முதல்வர் வருகை தரும் பொழுது அந்த திட்டத்தை தொடங்கி வைப்பார்.

ஏனென்றால் விவசாயிகளுக்கு தண்ணீர் தான் முக்கியம்.இந்தத் திட்டத்தின் மூலம் இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள்.அரசு விவசாயிகளுக்கு நாற்று, விதை, பழ வகை செடிகள் மற்றும் விவசாய கடன் உள்ளிட்டவைகளை கொடுத்து பல்வேறு நன்மைகள் செய்து வருகிறது. ஆனால் விவசாயிகளின் நிலை இன்னும் உயர்த்தப்படவில்லை என்பது மக்கள் அறிந்து கொண்ட உண்மை.இங்குள்ள வேளாண் அதிகாரிகள் விவசாயின் தேவைகளை முதல்வருக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். இன்னும் விவசாயம் தேவைகள் குறைகள் அறிந்து செயல்பட்டால் விவசாயிகள் விவசாயத்தை பெருமையாக செய்வார்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கிருக்கும் விவசாயிகள் வேலைகளுக்கு ஆட்களை விட்டு விட்டு வந்துள்ளார்கள் அவர்களுக்கு இரண்டு வேலை டீ வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் அப்படியே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார்கள். மாலையில் சம்பளம் கொடுக்க வேண்டும் இதுதான் தற்போது விவசாயிகளின் நிலை.

ஆனால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடப்பதில்லை இதனை சரி செய்ய அதிகாரிகள் தான் முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும் இதனை தீர்த்து வைக்க தான் வேளாண் துறை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

அதன்படி வழிநடத்தினால்தான் விவசாயிகள் விவசாயம் பார்ப்பார்கள்.

தற்போது எங்காவது பெண் பார்க்க சென்றால் விவசாயி என்று கூறினால் பெண் கிடையாது என்று தெரிவிக்கிறார்கள் இதுதான் உண்மை.

இதற்கு முன்பு வீட்டில் எத்தனை மாடுகள் உள்ளது என்று கேட்டால் என் வீட்டில் நான்கு ஜோடி மாடுகள் உள்ளது என்று கூறினால் உடனே பெண் தருவார்கள் தற்போது அந்த நிலை இல்லை. விவசாயம் தரையில் தள்ளப்படுகிறது.விவசாயத்தை தூக்கி நிறுத்த தமிழக அரசு ஏதாவது வழி செய்ய வேண்டும் விவசாய மக்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top