குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதி.
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து கணிசமாக குறைய தொடங்கியுள்ளது பிரதான அருவியில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பருவநிலை காலங்களாகும்.
இதனை ஒட்டி இங்குள்ள பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலி அருவி உள்ளிட்டவைகளில் ஜில்லென்று விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து செல்வார்கள்.
இந்த ஆண்டு மே மாத இறுதியில் பருவநிலை தொடங்கியது. கடந்த சில வாரங்களாக பருவநிலை களைகட்டி வரும் நிலையில் தற்போது குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மலை இல்லாததே இதற்கு காரணம் இதேபோன்று தென்காசி மாவட்டத்திலும் மழைப்பொழிவு கடந்த சில நாட்களாக இல்லாத சூழலில் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இதனால் ஆண்கள் பகுதியில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து வருகின்றனர் பெண்கள் பகுதியில் தண்ணீர் குறைவாகவே விழுவதால் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்து செல்கிறார்கள்.
இருப்பினும் வார விடுமுறை நாட்களை ஒட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வரத்து தொடர்ந்து அதிகமாகவே காணப்படுகிறது.




