நாமக்கல் :
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமு.க, அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக, அவசர செயற்குழு கூட்டம், நாளை ஜூலை 6ம் தேதி, காலை 11 மணிக்கு, மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சட்டசபை தேர்தல் தொகுதிப் பார்வையாளர்கள், நன்னியூர் ராஜேந்திரன், ரேகா பிரியதர்ஷினி, முனவர்ஜான் ஆகியோர் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வரும் 10ம் தேதி, நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதையடுத்து,
சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் மற்றும் கழக ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், தலைமை கழக மற்றும் மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.




