நாமக்கல் ;கெட்டிமேடு பகுதியில் வரும் 8ம் தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம் கெட்டிமேடு துணை மின் நிலையப் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 8ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் கோனங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ,.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கனவாய்ப்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாய்க்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால் புதூர், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 8ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




