Close
மார்ச் 7, 2026 1:22 மணி

ஆன்லைன் உணவு டெலிவரி கம்பெனிகளுக்கு ஆப்பு ! நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் தனி ஆப் வெளியீடு..!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், உணவு டெலிவரிக்கான புதிய செல்போன் அப்ளிகேஷனை, மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் துவக்கி வைத்தார்.

நாமக்கல்:

நாமக்கல் நகரில் ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், அதிரடியாக தனியாக ஆன்லைன் செல்போன் அப்ளிகேஷன் துவக்கியுள்ளனர்.

ஜமோட்டா, ஸ்விக்கி ஆகிய ஆன்லை லைன் உணவு டெலிவரி கம்பெனிகள் ஹோட்டல் உரிமையாளர்களிடம் கூடுதல் கமிஷன், டெலிவரி மற்றும் விளம்பர செலவுகளை உணவு பில்லில் பிடிப்பதாகவும், அதை முறைப்படுத்தாவிட்டால் ஜூலை 1 முதல் ஆன்லைன் அப்ளிகேஷன் நிறுவனங்களுக்கு உணவு வகைகள் சப்ளை செய்வதில்லை என்று கடந்த மாதம் ஓட்டல் உரிமையாளர்கள் அறிவித்தனர்.

இதையொட்டி கடந்த 1ம் தேதி முதல், நாமக்கல் நகர, தாலுகா ஓட்டல், பேக்கரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 100 கடைகளில் இருந்து ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு உணவு பொருட்கள் எதுவும் சப்ளை செய்வதில்லை. அவர்களின் மொபைல் ஆப்களை ஓட்டல் உரிமையாளர்கள் துண்டித்துவிட்டனர். இதனால் உணவு டெலிவரி பணியில் ஈடுபட்டிருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

இந்த நிலையில் நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்வதற்காக, ஜாரோஸ் என்ற புதிய செல்போன் அப்ளிகேஷனை அவர்களே உருவாக்கி, நேற்று காலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதை அறிமுகம் செய்தனர்.

நாமக்கல் பகுதியில் உணவு வேண்டுவோர் இந்த அப்ளிகேஷன் மூலம் தங்களுக்கு விருப்பமான ஓட்டல்களை தொடர்புகொண்டு, தேவையான உணவு வகைள் ஆர்டர் கொடுத்தால் ஓட்டலில் விற்பனை செய்யும் விலைக்கே, வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் என ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top