நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 599 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார். அவற்றை பரிசீலனை செய்த கலெக்டர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர், கலெக்டர் ஆபீஸ் தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், டிஆர்ஓ சுமன், சமூக பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




