6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் காத்திருப்பு போராட்டமானது நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தலைவர் காளிராஜ் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
ரேஷன் கடை பணியாளர்களுக்கு என தனித்துறை ஒதுக்கப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடையில் வினியோகம் செய்யப்படும் பொருட்கள் எடை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக, குறிப்பிட்ட எடை போட்டு பாக்கெட்டுகளில் பொருட்களை விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும், பயோ மெட்ரிக் முறையால் காலதாமதம் ஆவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகுவதால் அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாங்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் இதுவரை அரசானது செவி சாய்க்காத காரணத்தினால் பொதுமக்களை ஒன்று திரட்டி விரைவில் தாங்கள் போராட்டம் நடத்துவோம் எனவும், ரேஷன் கடையில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தாங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருவதால் இந்த பிரச்சனை வருகின்ற தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும் எனவும்,
ஆகவே தமிழக அரசு இந்த பிரச்சினைக்கு செவி சாய்க்காவிட்டால் மிகப்பெரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.




