Close
மார்ச் 7, 2026 4:57 மணி

காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு துறைக்கு உபகரணங்கள் வழங்கும் விழா: கலெக்டர் பங்கேற்பு..!

ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு ரூ.18.5லட்சம் மதிப்பிலான பேரிடர் கால மீட்பு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று,ரூ.18.5லட்சம் மதிப்பிலான மோட்டார் ரப்பர் விசை படகு,டார்ச் லைட்,வாக்கி டாக்கி,ஜிபிஎஸ் கருவி,மரம் அறுக்கும் கருவி,பாதாள கொலுசு,மனித மீட்பு பலகை,பாதுகாப்பு உடை, லைப் ஜாக்கெட்,எச்சரிக்கை தடுப்பு வேலி உள்ளிட்ட 30வகையான பேரிடர் கால மீட்பு உபகரணங்களை மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் இரா.மு.அப்துல் பாரியிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா,மாவட்ட தீயணைப்புத் துறை உதவி அலுவலர் பாஸ்கரன்,பேரிடர் மேலாண்மை துறைதுறை வட்டாட்சியர் மோகன்,உள்ளிட்ட தீயணைப்புத் துறை, ருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் என பலர் கலந்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top