காஞ்சிபுரம் அடுத்த நல்லூர் பகுதியில் சேர்ந்தவர் துளசிராமன். இவரது மனைவி சுமதி.துளசி ராமனின் சகோதரரான சுப்பிரமணியின் மகன் துரை என்பவர் பெட்டி கடைகளுக்கு பிஸ்கட் சப்ளை செய்யும் வியாபாரம் செய்து வரும் நிலையில் நல்லூர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் சுமதிக்கும் துரைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் இதுகுறித்து தகராறு ஏற்பட்ட போது துரை, வீட்டில் வைத்திருந்த கத்தியால் சுமதியின் தலையில் கொடூரமாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சுமதி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

சுமதி நிலையைக் கண்டு அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
துரை அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனைக்கு வைக்க எடுத்து செல்லப்பட்டபோது அவரது கணவர் துளசிராமன் மற்றும் அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தப்பி ஓடிய நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்




