சென்னை இரண்டாவது பசுமை விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ள நிலையில் நேற்று நிலம் கையகப்படுத்தும் வகையில் நேற்று பத்திரப் பதிவினை டிட்கோ நிறுவனம் தொடங்கியது.
இதனை கண்டித்து போராட்ட குழு சார்பில் இன்று அதன் தலைவர் சுப்பிரமணி வெளியிட்ட அறிக்கையில் :-
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து மாநில அரசு திட்டத்தை கைவிட வேண்டி கடந்த மூன்று வருடங்களாக போராடி வரும் நிலையில், விவசாய மக்களிடம் எந்த விதமான கலந்தாய்வு கூட்டங்களையும் நடத்தாமல், முறையான ஆய்வுகள் எதையும் நடத்தாமல்,விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடுவது, பண மதிப்பீட்டிற்கான அரசாணை வெளியிடுவது போன்ற தவறான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு இது போன்ற எந்த விதமான பூச்சாண்டி காட்டினாலும் பரந்தூர் பகுதி விவசாய மக்கள் ஒரு பிடி நிலத்தையும் கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்த மாவட்ட நிர்வாகம் நேற்று பரந்தூர் பகுதியில் நிலத்தில் முதலீடு செய்துள்ள வெளியூர் வியாபாரிகளை மாவட்ட நிர்வாகம் வாகன மற்றும் உணவு ஏற்பாடு செய்து அழைத்து வந்து வலுக்கட்டாயமாக அவங்களுடைய நிலங்களை பத்திர பதிவு செய்து வருகின்றனர்
இதன் மூலம் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்காக பரந்துர் பகுதி விவசாய மக்கள் நிலங்களை கொடுக்க முன்வந்து விட்டனர் என்ற மாய தோற்றத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முயற்சிப்பதை பரந்தூர் பகுதி விவசாய மக்கள்ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
ஜனநாயக படுகொலை செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், விவசாயிகளின் கண்ணீருக்கு காரணமாக இருக்கும் காஞ்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை கண்டித்தும் போராட்ட குழுவின் சார்பாக வருகின்ற 13.07.25 ஞாயிறுக்கிழமை காலை10 மணிஅளவில் ஏகனாபுரம் ‘டாக்டர் அம்பேத்கர் சிலை அருகே அனைத்து கிராம விவசாயிகள் பெருமக்களும்,ஓர் அணியாய் திரண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அனைவரும் தவறாமல் கலந்த வேண்டுமென அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது




