Close
மார்ச் 7, 2026 3:17 மணி

குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீ உதாசின் பாவாஜி மடத்தில் மகா யாகம்..!

எந்த அரசியல் அமைப்பில் இருந்தாலும், பிற மதங்களில் ஒன்று சேர்வது போல் இந்து மதங்களில் ஒன்று சேர வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்*..

முக்தி தரும் நகரங்களில் ஒன்றான காட்சிகள் புராதான மடாலயமான ஸ்ரீ உதாசின் பாவாஜி மடத்தில் இன்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு உலக நலனுக்காகவும் மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காவும், உலகின் தலைசிறந்த குருவான ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கும், மஹா கால பைரவர்க்கும் சிறப்பு மகா யாகம் அகஸ்திய கிருபா திரு. அன்புசெழியன் தலைமையில் உதாசின் பாவாஜி மடத்தில் நடைபெற்றது.

சிறப்பு யாகசாலையில் 108 கலசங்கள் நிறுத்தப்பட்டு காலை 7 மணிக்கு முதல் பகல் 12 மணி வரை தொடர்ச்சியாக பல்வேறு ஹோம பொருட்கள் கொண்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது.

இதில் உதாசின் பாவாஜி மடத்தின் தலைவர் சுவாமி தர்ஷினி அனுபவானந்த் , இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா.சி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக மதியம் ஒரு மணி அளவில் பூர்ணாஹூதி நடைபெற்று அகத்திய மாமுனிவருக்கு சிறப்பு கலசபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் சிறப்பு புனித நீரும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா, குரு பூர்ணிமாவை முன்னிட்டு இன்று சிறப்பு யாகம் நடைபெற்றது. அதில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

கும்பாபிஷேக முறைகளில் ஆன்மீக முறைப்படி நடத்த வேண்டுமே தவிர அதில் கொடியசைத்து போன்ற புதிய முறைகளை புகுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு 15 லட்சம் மக்கள் வீடுகளின் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபட்டது போல் இந்த வருடம் அதிகம் வைக்கப்பட்டு வணங்கப்படும் என தெரிவித்தார்.

பிற மதங்களில் பிரச்சனைகள் ஏற்படும் போது அனைவரும் ஒன்றிணைவது போல் இந்து மத பிரச்சனைகளிலும் அனைவரும் எந்த அரசியல் அமைப்புகளில் இருந்தாலும் இந்து என்ற உணர்வோடு பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார்.

தற்போது கடவுள் நம்பிக்கை இல்லாத நபர்கள் கூட கும்பாபிஷேக விழாவில் இடம் பெற்று நண்கொடையளித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வருகின்றனர்.

அதிக அளவில் நன்கொடை மூலமாகவே கும்பாபிஷேகம் நடைபெற்று வரும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் பங்கு என்ன என்ற குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என கேட்டும் தற்போது வரை வெளியிடவில்லை என்றும் அதனை வெளியிட மீண்டும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது இந்து முன்னணி நிர்வாகிகள் சந்தோஷ், உதாசின் பாவாஜி மட நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top