நாமக்கல் :
ராஜ்ய புரஷ்கார் விருது தேர்வு முகாமில் கலந்துகொள்ளும், சாரண, சாரணீயர்களுக்கான ஆயத்தப்பயிற்சி வேலகவுண்டம்பட்டி கொங்குநாடுபள்ளியில் நடைபெற்றது.
மாநில அளவில் கவர்னர் மூலம் வழங்கப்படும் உயரிய விருதான ராஜ்ய புரஷ்கார் விருதுத் தேர்வு முகாமில் பங்கேற்கவுள்ள, சாரண சாரணீயர்களுக்கான ஆயத்தப் பயிற்சி முகாம் வேலகவுண்டம்பட்டியில் உள்ள கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு சாரண மாவட்டங்களைச் சார்ந்த 763 சாரணர் சாரணீயர்கள் முகாமில் கலந்துகொண்டனர். கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவரும், சாரண இயக்க மாவட்டத் துணை கமிஷனருமான ராஜா, தாளாளர் ராஜன், ஆலோசகர் ராஜேந்திரன், பொருளாளர் ராஜராஜன், செயலாளர் சிங்காரவேலு, முதல்வர் சாரதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாம் செயலாளர் விஜய் வரவேறார். சிஇஓ மற்றும் முதன்மை சாரண கமிஷனர் மகேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமினைத் துவக்கிவைத்தார். தேசியத் தலைமையக பாடத்திட்டத்தின்படி பீட்டர் ஆரோக்கியசாமி, ராஜசேகர், .திலகவதி, ரூத்பேபி, தேன்மொழி, ஜெயந்தி ஆகியோர் அடங்கியகுழுவினர் முகாமினை நடத்தினார்கள்.
முகாமின் நிறைவு விழாவில் டிஇஓக்கள் விஜயன் (இடைநிலை), பச்சமுத்து (தொடக்கக்கல்வி), ஜோதி (தனியார்பள்ளிகள்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு முகாமைப் பார்வையிட்டனர். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வரும், மாவட்ட திரிசாரண கமிஷனருமான செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மாவட்டத் தலைவர் குணசேகரன், கமிஷனர்கள் சிங்காரவேல், தில்லைக்குமார், சித்ராமோகன், வெற்றிச்செல்வன், சாரதாமணி, பயிற்சித்திடல் செயலாளர் சிதம்பரம், சண்முகசுந்தரம், பழனியப்பன்> ரகோத்தமன் ஆகியோர் சாரண சாரணீயர்களை வாழ்த்திப் பேசினார்கள். முடிவில் மாவட்ட அமைப்பு கமிஷனர் சடையம்மாள் நன்றி கூறினார்.




