Close
மார்ச் 7, 2026 4:58 மணி

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1,940 கிலோ தரமற்ற விதைகள் விற்பனை செய்ய தடை..!

விதைகள் கோப்பு படம்

நாமக்கல் :

சேலம், நாமக்கல் மாவட்ட விதை விற்பனை கடைகளில் ஆய்வு செய்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் லைசென்ஸ் பெற்ற 1,408 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த விதை விற்பனை நிலையங்களில் நடப்பு ஆனி, ஆடி பருவத்திற்கு ஏற்ற தரமான நெல் விதைகள், தானிய விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்க தயார் நிலையில் உள்ளன.

இவ்விதைகளின் தரம் குறித்து, விதை ஆய்வுப் பிரிவு ஆய்வாளர்களால், அனைத்து நிலைகளிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்ததில் ரூ. 26 லட்சம் மதிப்பிலான 1,940 கிலோ தரமற்ற விதைகள் கண்டறியப்பட்டு விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது, கண்டிப்பாக விலைப்பட்டியல் கேட்டுப்பெற வேண்டும், வாங்கும் விதைகளின் பயிர் ரகம், விதைக் குவியல் எண் விதைத் தரம், விதைக் காலக்கெடு, ஆகியவற்றை சரிபார்த்து வாங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top