Close
மார்ச் 7, 2026 6:04 மணி

விருதுநகரில் பாமக சார்பில் மாவீரர் அழகு முத்துக்கோன் 268 ஆம் ஆண்டு குருபூஜை..!

பாமக சார்பில் அழகுமுத்துகோன் ஜெயந்தி விழா

காரியாபட்டி:

தமிழகம் முழுவதும் மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்களின் 268ம் ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று,விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆவியூர் கிராமத்தில் வைத்து காரியாபட்டி ஒன்றியச் செயலாளர் ஆவியூர் பாண்டிச்சாமி முன்னிலையில், மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு, அவரது திரு உருவப் படத்திற்கு ,மலர் தூவி அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் ,இந்த நிகழ்வில் மாநகராட்சி செயலாளர் காளீஸ்வரன்,தேர்தல் பணி குழு சத்தீஸ்வரன் மற்றும் ஆவியூர் ஒன்றிய கழக, நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top