Close
மார்ச் 7, 2026 6:08 மணி

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி..!

நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கான யோகா பயிற்சி முகாமை, மண்டல இணைப்பதிவாளர் அருளரசு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டை சர்வதேச கூட்டுறவு ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதையொட்டி இந்த ஆண்டு கூட்டுறவு அமைப்புகள் ஒரு சிறந்த உலகை உருவாக்குகின்றன என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இதையொட்டி, நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு யோகா பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது. மண்டல இணைப்பதிவாளர் அருளரசு குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைவர் உழவன் தங்கவேல் நிகழ்ச்சியில் கலந்துகொணடு யோகா பயிற்சி வகுப்பை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: யோகா பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மனதிற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை, மன அமைதி, மன அழுத்தம் குறைதல் போன்ற பலன்கள் கிடைக்கும். மேலும், யோகா இதய நோய், போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. யோகா பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. யோகா பயிற்சி செய்யும் போது மூளை செல்கள் புதிய இணைப்புகளை உருவாக்குகின்றன.

இதன் காரணமாக, மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் கற்றல் மற்றும் நினைவாற்றல் போன்ற மேம்பட்ட அறிவாற்றல் திறன்களுக்கு வழிவகுக்கும் என கூறினார்.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சந்தானம், நாமக்கல் அர்பன் பேங்க் துணைப்பதிவாளர் ஜோசப், என்சிஎம்எஸ் துணைப்பதிவாளர் இந்திரா, திருச்செங்கோடு அர்பன் பேங்க் துணைப் பதிவாளர் பாலசுப்பிரமணி, பயிற்சி அலுவலர் ஜீவிதா, நாமக்கல் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சரவணன் உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் யோகா பயிற்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top