Close
மார்ச் 7, 2026 4:41 மணி

மயான பாதை ஆக்கிரமிப்பு : பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மயான கூடத்திற்கு செல்லும் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆக்கிரமிப்பாளர்கள் - நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார்.

தென்காசி மாவட்டம், ஈச்சம்பொட்டல்புதூர் கிராமத்தில் உள்ள மயானக் கூட்டத்திற்கு செல்லும் பாதையை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து மயான கூடத்திற்கு செல்லும் பாதையில் வேலி அமைத்துள்ளதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் வசித்து மக்களில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை மயான கூடத்திற்கு கொண்டு செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது.

குறிப்பாக கடந்த வருடம் கோட்டூர்சாமி பாண்டியன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை எடுத்து செல்ல வழி இல்லாமல் உயர்நீதிமன்றத்திற்கு சென்று உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடலானது மயான கூடத்திற்கு எடுத்துச் சொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இது போன்ற சூழல் தொடர்ந்து நீடித்து வருவதால் அப்பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகவே, அரசு இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள நபர்களிடம் இருந்து அரசு நிலத்தை மீட்டு அந்த பகுதி மக்கள் மயான கூடத்திற்கு செல்ல வழியை ஏற்படுத்தி தருமாறு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவினை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், அவர்கள் அளித்த கோரிக்கை மனு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top