Close
மார்ச் 7, 2026 2:53 மணி

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!

ரத்த தானம் செய்த முன்னாள் மாணவர்கள்

நாம் மட்டும் வாழாமல் பிறரையும் வாழ வைக்க முயற்சிக்க வேண்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழும தாளாளர் கோ.ப.செந்தில்குமார் வேண்டுகோள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழுமம் சார்பில் பொறியியல் மருத்துவ கலை மற்றும் அறிவியல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அவ்வகையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி கடந்த 1996 — 2000 ஆண்டில் சுமார் 300 மாணவ மாணவியர்கள் 5 பிரிவுகளின் கீழ் பொறியியல் கல்வி பயின்றனர்.

இவர்கள் அனைவரும் தற்போது இந்தியா மற்றும் பல்வேறு மேலை நாடுகளில் தற்போது பல்வேறு நிறுவனத்தில் தலைமை பொறுப்புகளிலும், தொழிலதிபர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் பயின்ற கல்லூரியில் ஒன்றிணைவது என்று முடிவு செய்து அனைவரும் இன்று காலை 9 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடினர்.

25 வருடங்களுக்கு பிறகு இவர்கள் தங்கள் உடன்படித்த சகோதர சகோதரிகளை கண்டவுடன் சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டு ஆரவாரம் செய்தபடி மகிழ்ந்தனர்.

சந்திப்பின் முதல் நிகழ்வாக ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு இந்நிகழ்வினை கொண்டாடும் வகையில் 25 பேர் இரத்ததானம் செய்து மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 25 வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு பாடம் கற்றுத்தந்த பேராசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரி தாளாளரும், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற தலைவருமான கோ.ப. செந்தில்குமார் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டு, ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி நிதியாக ரூபாய் பத்து லட்சம் அளித்தனர்.

விழாவில் முதல்முறையாக பேசிய தாளாளர் கோ.பா. செந்தில்குமார்,
பழைய நினைவுகளை கொண்டு மீண்டும் கல்லூரிக்கு வந்து கல்லூரியை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், பாடம் சொல்லிக் கொடுக்க குருமார்கள் வளர்த்த பெற்றோர்கள் என அனைவரையும் நாம் பாதுகாக்க வேண்டும் எனவும், வாழ்விற்கு பணம் தேவை என்பதும் அதற்காக வாழ வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

நாம் மட்டும் வாழாமல் நம்மை சுற்றி வாழும் அனைவரையும் நாம் வாழ வைக்க வேண்டும் எனவும், ஏழை மாணவர்களின் கல்விக்கு அளித்த நிதி முறையாக அனைவருக்கும் சென்று சேரும் என்பதும் அதற்கான கணக்கு தங்களுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விழாவில் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி டீன் முனைவர் ராமசாமி, முதல்வர் முனைவர் ராஜா , நிர்வாக அலுவலர் சதானந்தன் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

பல ஆயிரம் மைல் கடந்து வந்து 25 வருடங்களுக்குப் பிறகு தங்கள் நண்பர்களை கண்ட மகிழ்ச்சி தங்களை புத்துயிர் செய்தது என தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top