Close
மார்ச் 7, 2026 1:34 மணி

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு : 30,864 பேர் பங்கேற்பு: 5,572 பேர் ஆப்சென்ட்..!

நாமக்கல் நகரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மையத்தை, கலெக்டர் துர்காமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில், 124 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி. குரூப் 4 தேர்வில், 30,864 பேர் பங்கேற்றனர். 5,572 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) மூலம் ஜூனியர் அசிஸ்டெண்ட்,ஆர்.ஐ., வி.ஏ.ஓ., டைப்பிஸ்ட், 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் 4 போட்டித்தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்ற இந்த தேர்விற்கு, மாநிலம் முழுவதும், 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனூர், திருச்செங்கோடு, ப.வேலூர் ஆகிய 7 தாலுகாக்களில், 124 மையங்களில் போட்டித்தேர்வு நடந்தது.
தேர்வுக்காக மாவட்டம் முழுவதும், 36,436 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். தேர்வு பணியில் 124 முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில் 12 பறக்கும் படைகள், தேர்வுப் பொருட்களை எடுத்துச் செல்ல மண்டல துணை தாசில்தார் நிலையில், 32 நடமாடும் குழுக்கள், தாசில்தார் நிலையில் 124 பேர், ஒரு தாலுகாவிற்கு ஒருவர் வீதம், மொத்தமாக தேர்வுப் பணிகளை கண்காணிக்க உதவி கலெக்டர்கள் 7 பேர், டி.ஆர்.ஓ., சுமன் ஆகியோர் நியமிக்கப்பட்டு, தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், 129 வீடியோ கேமராக்களும், 124 கண்காணிப்பு கேமராக்களும் தேர்வுக்கான வினாத்தாள் மையத்திலும், தேர்வு அறைகளிலும் பொருத்தப்பட்டிருந்தன. தேர்வு நடந்த 124 மையங்களிலும், தலா 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த குரூப் 4 தேர்வை, கலெக்டர் துர்கா மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில், 30,864 தேர்வர்கள் பங்கேற்றனர். 5,572 பேர் தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top